மட்டக்களப்பு மாநகரசபை மேயராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் தியாகராசா சரவணபவான், தெரிவுசெய்யப்பட்டுள்ளார். பிரதி மேயராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கந்தசாமி சத்தியசீலன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
|
மட்டக்களப்பு மாநகரசபையின் அமர்வு, கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எம்.வை.எம்.சலீம் தலைமையில், இன்று நடைபெற்றது. மேயரைத் தெரிவுசெய்வதற்கான தியாகராசா சரவணபவான் மற்றும் சிவலிங்கம் சோமசுந்தரம் ஆகியோருக்கிடையில் பகிரங்க வாக்கெடுப்பு நடைபெற்றது. இதன்போது, 25 வாக்கு பெற்று தியாகராசா சரவணபவான் மேயராகத் தெரிவு செய்யப்பட்டார். இவரை எதிர்த்துப் போட்டியிட்டவர் 11 வாக்குகளைப் பெற்றார். இருவர், நடுநிலை வகித்தனர்.
பிரதி மேயரைத் தெரிவு செய்வதற்காக கந்தசாமி சத்தியசீலன், ஸ்ரீபன் ராஜன், தெய்வநாயகம் சிவலிங்கம் ஆகியோருக்கிடையில் போட்டி நிலவியது.இதன்போது, நடத்தப்பட்ட பகிரங்க வாக்கெடுப்பில் கந்தசாமி சத்தியசீலன் 24 வாக்குகளையும், தெய்வநாயகம் சிவலிங்கம் 11 வாக்குகளையும், ஸ்ரீபன் ராஜன் 3 வாக்குகளையும் பெற்றனர். மட்டக்களப்பு மாநகர சபை மேயராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள தியாகராஜா சரவணபவனின் தந்தை, அமரர் தியாகராஜாவும் மட்டக்களப்பு மாநகர முன்னாள் மேயராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
|
Home »
எமது பகுதிச் செய்திகள்
» மட்டக்களப்பு மேயராக சரவணபவான் தெரிவு!
மட்டக்களப்பு மேயராக சரவணபவான் தெரிவு!
Labels:
எமது பகுதிச் செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments: