Advertisement

Responsive Advertisement

இரண்டு கால்களுடன் பிறந்த பசுக்கன்று!

முல்லைத்தீவில் இரண்டு கால்களுடன் பசுக் கன்று ஒன்று பிறந்துள்ளது. புதுக்குடியிருப்பு -சுதந்திரபுரம் பகுதியிலேயே இந்தக் கன்றுக்குட்டி நேற்று பிறந்துள்ளது. முன்னங்கால்கள் இரண்டும் இல்லாத நிலையில் தனியே இரண்டு கால்களுடன் மட்டும் குறித்த பசுக் கன்று பிறந்துள்ளது.
இதனால் பசுக் கன்று பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளது. எழுந்து நின்று உணவு அருந்த முடியாமல் தவிப்பதாக அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார். அதிசயிக்கும் வகையில் பிறந்த பசுக் கன்றை அந்தப் பகுதி மக்கள் ஆர்வத்துடன் சென்று பார்வையிட்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments