2017ம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில், தற்போது அகில இலங்கை ரீதியில் முதலிடம் பிடித்த மாணவர்களின் விபரங்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி, கம்பஹா - ரட்னாவளி மகாவித்தியாலயத்தை சேர்ந்த கசுன் செனவிரட்ன, ஷாமோதி சுபசிங்க, கண்டி - மகளிர் கல்லூரியின் நவோதயா ரணசிங்க, கண்டி - மஹமாய கல்லூரியின் லிமாஷா விமலவீர, மாத்தறை - சுஜாதா வித்தியாலயத்தின் ஆர். லக்பிரியா, இரத்தினபுரி - சீவலி மகாவித்தியாலயத்தின் கே. பிரதீபத் ஆகியோர் முதலிடங்களை பெற்றுள்ளனர்.
கொழும்பு - தேவி பாலிகா வித்தியாலயத்தின் என்.ஹேரத், கொழும்பு - சீ.எம்.எஸ் பாலிகா வித்தியாலயத்தின் ஏ. பெர்ணான்டோ, நுகோகொட - சமுத்ரா தேவி பாலிகா வித்தியாலயத்தின் ஆர். குமாரசிங்க ஆகியோர் இரண்டாம் இடத்தினை பெற்றுக்கொண்டுள்ளனர்.
0 Comments