Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

கரையொதுங்கிய அதிசயக் குடிசை பார்வையிட மக்கள் படையெடுப்பு

யாழ்ப்பாணம் பருத்தித்துறை கடற்பரப்பில் அதிசயமான குடிசையொன்று மீட்கப்பட்டு கரைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.குறித்த குடிசையானது தாய்லாந்து நாட்டு மக்களால் உருவாக்கப்பட்டிருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்றது.
தாய்லாந்து மக்கள் தமது மூதாதையருக்கு பிதிர்க்கடன் செய்யும் போது தாம் வசிக்கும் வீட்டை ஒத்த வீடொன்றை உருவாக்கி கடலில் மிதக்கவிடுவது அவர்களின் வழக்கமாக இருந்து வருகின்றது.
அவ்வாறானதொரு மூங்கில்களால் உருவாக்கப்பட்ட குடிசையொன்று இவ்வாறு கடலில் மிதந்து வந்துள்ளது.இவ்வாறு கரையொதுங்கியுள்ள மூங்கிலால் வடிவமைக்கப்பட்ட குடிசையை ஏராளமான பொதுமக்கள் பார்வையிடுவதற்காக குறித்த பகுதிக்கு படையெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.(15)1

Post a Comment

0 Comments