Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

கொக்காவிலில் நேற்றிரவு கோர விபத்து நால்வர் உயிரிழப்பு

ஏ-9 வீதியில், கொக்காவில் 18ஆம் மைல் கல் பகுதியில் நேற்றிரவு 8.35 மணியளவில் இடம்பெற்ற கோர விபத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர், ஒருவர் படுகாயமடைந்த நிலையில், கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொக்காவில் பகுதியில், தென்னிலங்கையில் இருந்து யாழ் நோக்கி பயணித்த வான் ஒன்று வீதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பாரவூர்தி ஒன்றுடன் மோதியதாலேயே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் சம்பவ இடத்திலேயே நால்வர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.விபத்திற்கான காரணம் தொடர்பாக மேலதிக தகவல்கள் தெரியவராத நிலையில் கிளிநொச்சி பொலிஸார் தீவிர விசாரணைகளில் ஈடுபட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.(15)13133-3-c68ddc4de313a8850e686de627864973kokkavil-acci-100118-seithy (1)kokkavil-acci-100118-seithy (2)

Post a Comment

0 Comments