Advertisement

Responsive Advertisement

பெரிய கல்லாற்றில் இளைஞன் கொலை

களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் அமைந்துள்ள தேவாலய வளாகத்துக்குள் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.


சந்தேகநபர்கள் களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிவான் நீதிமன்றில் பதில் நீதிவான் வினோபா இந்திரன் முன்னிலையில் இன்று (வியாழக்கிழமை) ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

பெரியகல்லாறு அருளானந்தர் தேவாலயத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின்போது, இருவருக்கிடையே இடம்பெற்ற வாய்த்தர்க்கம் கத்திக்குத்தாக மாறியதில் பெரியகல்லாறு முதலாம் குறிச்சி பிரதான வீதியைச் சேர்ந்த 23 வயதான ஜேசுதாசன் திமேசன் என்னும் இளைஞர் உயிரிழந்தார்.

இந்த படுகொலை சம்பவம் தொடர்பாக 54 வயதுடைய மார்க்கண்டு பரிமளராசா என்பவரும் அவருடைய மகனான 19 வயதுடைய பரிமளராசா அபிசனன் என்பவருமே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments