தென் கிழக்கு வங்க கடலில் அந்தமான் அருகே உருவான குறைந்த தாழ்வு பகுதி வடக்கு ஆந்திரா-ஒடிசா கடற்கரை இடையே புயல் வலு இழந்த நிலையில் கரையை கடக்கும் என்று இந்திய வானிலை நிலையம் தெரிவித்துள்ளது.
தென் கிழக்கு வங்க கடலில் அந்தமான் அருகே உருவான குறைந்த தாழ்வு பகுதி நேற்று காற்றழுத்த மண்டலமாக மாறியது.
இது புயல் சின்னமாக மாறி தீவிரம் அடைந்து வடதமிழகத்தை தாக்கும் என்றும் சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், செயற்கைகோள் புகைப்படங்களை வைத்து பல்வேறு வானிலை நிபுணர்கள் தகவல் வெளியிட்டனர்.
இந்த நிலையில் காற்றழுத்த மண்டலம் வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் ஆந்திரா நோக்கி நகர்ந்தது. இதன் மூலம் வடதமிழகத்துக்கு புயல் ஆபத்து நீங்கியதாக தெரிவிக்கப்பட்டு;ளளது.
நேற்று இரவு ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக வலுவடைந்து வடக்கு ஆந்திரா-ஒடிசா பகுதியை நோக்கி நகர்ந்தது. வடக்கு ஆந்திராவின் மசூலிப்பட்டினத்தில் இருந்து கிழக்கு-தென் கிழக்கே 800 கி.மீ. தொலை விலும், ஒடிசாவின் கோபால்பூரில் இருந்து தெற்கு-தென் கிழக்கே 770 கி.மீ. தொலைவிலும் இது காணப்பட்டது.
நாளை காலை வடக்கு ஆந்திரா-ஒடிசா கடற்கரை இடையே புயல் சின்னம் வலு இழந்த நிலையில் கரையை கடக்கும் என்று இந்திய வானிலை சிரலயம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக ஆந்திர கடலோர மாவட்டங்களில் இன்றும் நாளையும் பலத்த மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழக கடல் பகுதியில் கொந்தளிப்பு காணப்படும் மீனவர்கள் ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் கூறப்பட்டுள்ளது.-


0 Comments