Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மழையுடன் கூடிய காலநிலை தொடரும் - வளிமண்டலவியல் திணைக்களம்

நாட்டில் தற்பொழுது நிலவும் மழையுடன் கூடிய காலநிலை எதிர்வரும் சிலதினங்கள் தொடரும் சாத்தியங்கள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வட-அரைக் கோளத்தில் இருந்தும், தென்-அரைகோளத்தில் இருந்து வரும் காற்று சந்திக்கும் தாழமுக்க பிரதேசம் இலங்கைக்கு அருகில் இருப்பதால் இந்தக் காலநிலை ஏற்படுகின்றது.

பெரும்பாலான பிரதேசங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

மழை அல்லது இடியுடன் கூடிய மழை நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பெய்யும். மலைப்பிரதேசங்களை அண்மித்த பகுதிகளில் கடும் மழை பெய்யும் சாத்தியங்கள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய , சப்ரகமுவ , மேற்கு ,ஊவா ,வடக்கு மற்றும் தென் மாகாணங்களிலும் அம்பாறை மட்டக்களப்பு மாவட்டங்களிலும் 150 மில்லிமீற்றருக்கு அதிகமான மழைவீழ்ச்சியும், ஏனைனய சில பிரதேசங்களில் 100 மில்லிமீற்றருக்கு அதிகமான மழைவீழ்ச்சியும் 24 மணித்தியாளங்களில் பதிவாகக்கூடும் .

கடும் காற்றின் காரணமாக கடற்பிரதேசம் கொந்தளிப்புடன் காணப்படும். கடற்றொழிலாளர் மற்றும் கடல் நடவடிக்கையில் ஈடுபடுவோர் அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

இடியுடன் கூடிய மழையின்போது பலத்த காற்றுவீசக்கூடும். இடிமின்னலிலிருந்து பொதுமக்கள் அவதானமாக செயற்படுமாறு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

Post a Comment

0 Comments