காலியில் ஏற்பட்ட அமைதியின்மை நிலைமைகளை ஆராய்வதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அந்த பகுதிகளுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
சாகல ரட்னாநயக்க , வஜிர அபேவர்தன உள்ளிட்ட அமைச்சர்களும் அவருடன் அங்கு சென்றுள்ளனர்.
குறித்த பகுதிகளில் சிறிய சம்பவமொன்றை அடிப்படையாக கொண்டு இரு இன குழுக்களுக்கிடையே கடந்த வெள்ளிக்கிழமை முதல் வன்முறைகள் ஏற்பட்டிருந்ததுடன் இரண்டு நாட்களாக இரவு நேரத்தில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.


0 Comments