மட்டக்களப்பு மாவட்டத்தில் மாவீரர் தின நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டுவருகின்றனர்.மாவீரர் துயிலும் இல்லங்கள்,பொது இடங்கள்,பல்கலைக்கழகம் ஆகியனவற்றில் மாவீரர் தின நிகழ்வுகள் அனுஸ்டிக்கப்பட்டுவருகின்றன.
கிழக்குப் பல்கலைக் கழக வந்தாறுமூலை வளாகத்தில் மாவீரர் தின நிகழ்வு, இன்று (27) உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
கிழக்குப் பல்கலைக்கழக கலை, காலசார பீட மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த மாவீரர் தின நிகழ்வில் அனைத்துப் பீடங்களையும் சேர்ந்த மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்வி சாரா ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு உயிர் நீத்த மாவீர்களுக்கு, மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், இரத்த தானமும் இதன்போது நடைபெற்றது.
Home »
எமது பகுதிச் செய்திகள்
» கிழக்கு பல்கலைக்கழகத்தில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற மாவீரர்தின நிகழ்வு
கிழக்கு பல்கலைக்கழகத்தில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற மாவீரர்தின நிகழ்வு
Labels:
எமது பகுதிச் செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments: