Advertisement

Responsive Advertisement

தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை ஆரம்பம்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை இன்று ஆரம்பமாகியுள்ளது.
93 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யும் அறிவிப்பு வௌியிடப்பட்டதை தொடர்ந்தே இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 11 ஆம் திகதிலிருந்து 14 ஆம் திகதி வரை வேட்புமனு ஏற்றுக் கொள்ளப்படவுள்ளன.
தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் தங்களின் கட்டுப்பணத்தை செலுத்த வேண்டும் என மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய, சுயேட்சைகுழு வேட்பாளர்கள் 5,000 ரூபாவும், அரசியல் கட்சி ஒன்றை சேர்ந்த வேட்பாளர்கள் 1500 ரூபாவும் கட்டுப்பணமாக செலுத்த வேண்டும்.
பொது ஜன முன்னணி கம்பஹா, களுத்துறை மற்றும் காலி ஆகிய மாவட்டங்களில் தமது கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர்.

Post a Comment

0 Comments