Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

இன்று காலை கூடுகிறது கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு! - ஈபிஆர்எல்எவ் புறக்கணிப்பு

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்றக் குழு இரா.சம்­பந்தன் தலை­மையில் இன்று காலை கூட­வுள்­ளது. கடந்த ஒன்­பதம் திகதி கூடி­யி­ருந்த கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்றக் குழுவில் வரவு செல­வுத்­ திட்ட விடயம் குறித்து கலந்­து­ரை­யா­டப்பட்­ட­போதும் அது ­கு­றித்து எவ்­வி­த­மான முடி­வு­களும் எடுக்­கப்­பட்­டி­ருக்­க­வில்லை. அதே­ நேரம் வரவு – செல­வுத்­ திட்ட விட­யங்கள், வடக்கு கிழக்கு மக்­களின் அடிப்­படை பிரச்­சி­னைகள் தொடர்­பான விட­யங்கள் தொடர்பில் இன்றைக்கு முன்­ன­தாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்­றக்­குழு சந்­திப்­ப­தென தீர்­மா­னிக்­கப்­பட்­டி­ருந்­தது.
அத்­துடன் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான சிறி­தரன், கோடீஸ்­வரன், சார்ள்ஸ் நிர்­ம­ல­நாதன் ஆகி­யோரும் வர­வு­செ­ல­வுத்­திட்­டத்­தினை எதிர்த்து வாக்­க­ளிக்க வேண்டும் என்றும் வலி­யு­றுத்­தி­யி­ருந்­தனர்.
இவ்­வா­றான பின்­ன­ணி­யில், இன்­று­ காலை நடை­பெ­ற­வுள்ள பாரா­ளு­மன்­றக்­குழுக் கூட்­டத்தில் வரவு – செல­வுத்­திட்­டத்­திற்கு ஆத­ர­வ­ளிப்­பதா இல்­லையா என்­பது குறித்து இறு­தி­ மு­டி­வொன்று எடுக்­கப்­படும் என்றும், உறுப்­பி­னர்கள் அனை­வரும் ஏக­நே­ரத்தில் இருக்­க­ மு­டி­யாது போன­மை­யினால் ஜனா­தி­ப­தி­யு­ட­னான சந்­திப்­பினை மேற்­கொள்­வதில் சிர­மங்கள் ஏற்­பட்­டி­ருந்­தா­கவும் கூட்­ட­மைப்பின் ஊட­கப்­பேச்­சா­ளரும், யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எம்.ஏ.சுமந்­திரன் குறிப்­பிட்­டுள்ளார்.
எவ்­வா­றா­யினும், இன்று நடை­பெறும் பாரா­ளு­மன்றக் குழு கூட்­டத்­திலும், வரவு செல­வுத்­திட்­டத்தின் மீதான வாக்­கெ­டுப்­பிலும் ஈ.பி.ஆர்.எல்.எப். பங்­கேற்­காது என அக்­கட்­சியின் செயலாளரும் வன்னி மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான சிவ­சக்தி ஆனந்தன் அறி­வித்­துள்ளார்.
மேலும் மாகா­ண­சபை திருத்­தச்­சட்­டத்­திற்கு ஆத­ர­வ­ளித்­தமை உட்­பட எதிர்க்­கட்­சியின் நல்­லெண்ண வெளிப்­பா­டு­க­ளுக்­காக தேசிய கொள்கை மற்றும் பொரு­ளா­தார அபி­வி­ருத்தி அமைச்சின் ஊடாக மக்கள் நலத்­திட்­டங்­களை முன்­னெ­டுப்­ப­தற்­காக இரண்டு கோடி­ரூபா பெறு­ம­தி­யான விசேட நிதி­யொ­துக்­கீடு ஒன்று இலங்கை தமி­ழ­ர­சுக்­ கட்­சியின் உறுப்­பி­னர்­க­ளுக்கு (யோகேஸ்­வரன் எம்.பி தவிர்ந்த) மட்டும் கிடைத்­துள்­ளமை மற்றும் இம்­முறை வரவு – செல­வுத்­ திட்­டத்­திலும் பாது­காப்­புக்­கான நிதி ஒதுக்­கீடு அதி­க­மாக காணப்­படும் அதே­நேரம் கடந்­த­கா­லத்­திலும் இது­போன்று கண்­து­டைப்­புக்­காக நிதி­யொ­துக்­கீ­டுகள் மேற்­கொள்­ளப்­பட்­டமை உட்­பட குறை­பா­டுகள் இருக்­கின்­றன.
மேலும் ஜனா­தி­ப­தி­யு­ட­னான சந்திப்பும் இடம்பெறவில்லை. இவ்வாறான விடயங்கள் காணப்படுகின்ற நிலையில் ஒரு ஏற்றுக்கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டின் பின்னரே குறித்த வரவு – செலவுத் திட்டத்திற்கு வாக்களிப்பது குறித்த முடிவை எடுக்க வேண்டும். இல்லையேல் எதிர்த்து வாக்களிப்பதை விட மாற்றுவழியில்லை என்ற நிலைப்பாட்டில் ரெலோ மற்றும் புளொட் கட்சிகள் இருப் பதாக உள்ளக தகவல்கள் மூலம் அறிய முடிகின்றது.

Post a Comment

0 Comments