Home » » மண்சரிவு அபாயம்; அவதானத்துடன் செயற்படுமாறு அறிவிப்பு

மண்சரிவு அபாயம்; அவதானத்துடன் செயற்படுமாறு அறிவிப்பு

மழையுடனான வானிலையின் போது மண்சரிவு அபாயம் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு இடர் முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது
சப்ரகமுவ , மத்திய, வடக்கு உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு மழை பெய்யக் கூடும் என இடர் முகாமைத்துவ நிலைத்தியத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி குறிப்பிட்டுள்ளார்.
மழையுடனான வானிலை நிலவும் சந்தர்பங்களில் ஆறுகள் மற்றும் நீர்தேக்கங்களை அண்மித்த பகுதிகளில் வாழும் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் சப்ரகமுவ , மேல் , மத்திய, வட மேல் , வட மாகாணங்களைச் சேர்நத மக்கள் மழையுடனான வானிலை நிலவுகின்ற போது மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு இடர் முகாமைத்துவ நிலைத்தியத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி குறிப்பிட்டுள்ளார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |