Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ஜப்பானின் மீது ஏவுகணையை செலுத்தியது ஆரம்ப கட்ட நடவடிக்கையே- வடகொரியா எச்சரிக்கை

பசுவிக்கில் முன்னெடுக்கவுள்ள பல இராணுவ நடவடிக்கைகளில் முதல் நடவடிக்கையாகவே வடகொரியா ஜப்பானின் கடற்பகுதியின் மேலாக ஏவுகணைகiணையை செலுத்தியதாக வடகொரியாவின் அரச ஊடகம் தெரிவித்துள்ளது.
மேலும் பசுவிக்கில் உள்ள குவாம் தளத்தின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்படலாம் எனவும் வடகொரியாவின் அரச ஊடகம் எச்சரித்துள்ளது.
வடகொரியாவின் அரச செய்தி ஸ்தாபனமான கேஎன்சிஏ வடகொரியா திட்டமிட்டே ஜப்பானின் மீது ஏவுகணையை செலுத்தியதாக ஏற்றுக்கொண்டுள்ளது.
இது உண்மையான யுத்தம் போன்றது பசுவிக்கில் கொரிய இராணுவம் மேற்கொள்ளவுள்ள நடவடிக்கையின் ஆரம்பம் இது குவாம் மீதான தாக்குதலிற்கு முன்னோடியான நடவடிக்கை இது என வடகொரியா ஜனாதிபதி தெரிவித்தார் என கேசிஎன் ஏ தெரிவித்துள்ளது.
பிராந்தியத்தை இலக்குவைத்து மேலும் பல நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு வடகொரிய ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார் என்றும் கேசிஎன் ஏ தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments