Advertisement

Responsive Advertisement

ஏறாவூரில் ஹெரோயினுடன் இளைஞர்கள் கைது

ஏறாவூரில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தாமரைக்கேணியில், ஏறாவூர் நகர் மற்றும் மீராகேணி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போதே குறித்த இளைஞர்கள் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொதுமக்களிடம் இருந்து கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையிலேயே இவர்கள் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் சந்தேகநபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments