Advertisement

Responsive Advertisement

அக்குரஸ்ஸ பிரதேசத்தின் தற்போதைய நிலை!

மாத்தறை மாவட்டத்தின் அக்குரஸ்ஸ பிரதேசத்தின் தற்போதைய நிலை தொடர்பில் சில புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.
குறித்த புகைப்படத்தில் “அக்குரஸ்ஸ” பெயர்பலகை வரை நீர்மட்டத்தின் அளவு உயர்ந்து காணப்படுகின்றது.
இன்று பெய்த அடை மழையினால் இலங்கை முழுவதும் பெரும் பாதிப்புக்கள் ஏற்பட்டதுடன் 91 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
அதிலும் களுத்துறை மாவட்டத்தில் மாத்திரம் 40 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
மேலும் இதில் மக்களின் பொதுச்சொத்துக்களுக்கு பெரும் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதுடன், ஒரே நாளில் இத்தனை அழிவுகள் ஏற்பட்டதால் மக்கள் பெரும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்த பகுதியில் மக்களுடைய வீடுகள் முற்றாக நீரில் மூழ்கியுள்ளதையும் காணக்கூடியதாக உள்ளது.






Post a Comment

0 Comments