இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் குறிப்பாக கடற்பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு சுமார் 80 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கலாம் என கூறியிருக்கும் யாழ்.மாவட்ட வானிலை அவதான நிலையம் மீனவர்கள் மிக மிக அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுத்துள்ளது.
யாழ். மாவட்ட வானிலை அவதான நிலைய பொறுப்பதிகாரி ரி.பிரதீபன் இதுகுறித்து கூறுகையில், இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுகின்றது. இது மேலும் அதிகரிக்கலாம். இதனால் காங்கேசன்துறை, திருகோணமலை, மட்டக்களப்பு பகுதிகளில் குறிப்பாக கடற்பகுதியில் காற்றின்வேகம் மணிக்கு சுமார் 80 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கலாம். தரையில் சுமார் 50 தொடக்கம் 60 கிலோ மீற்றர் வரை இருக்கலாம். எனவே மீனவர்கள் கடலுக்கு செல்வதில் மிக மிக அவதானமாக இருக்கவேண்டும் என அவர் மேலும் கூறியுள்ளார்
Home »
எமது பகுதிச் செய்திகள்
» வடக்கு, கிழக்கு பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு சுமார் 80 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கலாம்
வடக்கு, கிழக்கு பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு சுமார் 80 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கலாம்
Labels:
எமது பகுதிச் செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments: