Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

பத்தாயிரம் இராணுவத்தினர் விலகல்!

இராணுவத்தில் இருந்து சட்ட ரீதியாக விலகிக்கொள்வதற்காக வழங்கப்பட்டிருந்த பொது மன்னிப்பு காலத்தில் சுமார் 10 ஆயிரம் பேர் தமாக முன்வந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்கள் சட்டரீதியாக விலகிக்கொள்வதற்காக பொதுமன்னிப்புக் காலம் கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது.
கடந்த மாதம் 12ம் திகதி முதல் இம்மாதம் 12ம் திகதி வரை இப்பொது மன்னிப்பு காலம் வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
இதன்படி நேற்று வரை இராணுவத்தில் இருந்து தப்பியோடிய, சுமார் 10,417 பேர் தாமாக முன்வந்து சட்டரீதியாக இராணுவத்தில் இருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இராணுவத்திலிருந்து தப்பியோடிய மேலும் 15 ஆயிரம் பேர் மறைந்து வாழ்வதாக இராணுவத் தலைமையகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Post a Comment

0 Comments