பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி.ந.புள்ளநாயகம்அவர்களின் வழிகாட்டலின் கீழ் கல்வி அபிவிருத்திக்கான பிரதிக் கல்விப்பணிப்பாளர் திரு.எஸ்.ஞானராசா அவர்களின் நெறிப்படுத்தலில் ஆரம்பக்கல்விப் பிரிவு உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு.பா.வரதராஜன் ஆரம்பப்பிரிவு சேவைக்கால ஆசிரிய ஆலோசகரின் உதவியுடன் 2016 ஆம் ஆண்டுதரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் அடைவு மட்டத்தை அதிகரிக்கும்செயற்பாடுகளை பட்டிருப்பு கல்வி வலய ஆரம்பக் கல்விப் பிரிவுமேற்கொண்டு வருகின்றது.
இந்த வகையில் இன்று 27.08.2016 பட்டிருப்பு கல்வி வலயத்தின் மட்/பட்/ஓந்தாச்சிமடம் ஸ்ரீ சித்தி விநாயகர் பாடசாலையில் ஆரம்பப் பிரிவுவிஞ்ஞான முகாம் நடைபெற்றது. ஆரம்பப் பிரிவு கலைத் திட்டத்தின்பிரகாரம் சுற்றாடல் சார்ந்த செயற்பாட்டு பாடப் பரப்பில் உள்ள விஞ்ஞானபரிசோதனைகளை செயற்பாட்டு ரீதியாக முன் வைத்து விஞ்ஞானமுகாம் நடாத்தப்பட்டது.
ஆரம்பக் கல்விப் பிரிவு உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு.பா.வரதராஜன்தலைமையில் நடைபெற்ற இவ் விஞ்ஞான முகாமினை ஆரம்பித்துவைக்கும் நிகழ்வில் பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர்திருமதி.ந.புள்ளநாயகம், நிருவாகத்திற்குப் பொறுப்பான பிரதிக் கல்விப்பணிப்பாளர் திரு.மா.உலககேஸ்பரம், கல்வி அபிவிருத்திக்கான பிரதிக்கல்விப் பணிப்பாளர் திரு.எஸ்.ஞானராசா மண்முனை தென் எருவில் பற்றுக் கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு.வி.திரவியராசா, உதவிக்கல்விப் பணிப்பாளர்களானதிரு. க. சுந்தரலிங்கம், திரு.க.குணசேகரம், ஆரம்பப் பிரிவு சேவைக்காலஆசிரிய ஆலோசகர் திருமதி.ச.தில்லைநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்
அத்துடன் இந் நிகழ்வில் யுனிசெவ் (UNICEF) பிரதிநிதி திருமதி. ரெபின்சியாபற்றர்சன், மற்றும் ஜனாப் நிபால் அவர்களும் கலந்து முகாமினைசிறப்பித்தனர். இன்றைய விஞ்ஞான முகாமில் ஆரம்பப் பிரிவுஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலர் கலந்து கொண்டமைகுறிப்பிடத்தக்கதாகும்
















0 Comments