அம்பாறை - ஒலுவில் கடற்படை முகாமில் கடமையாற்றி வந்த கடற்படை வீரர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சடலம் இன்று (20) காலை மீட்கப்பட்டதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சடலம் திம்புலாகல பகுதியைச் சேர்ந்த நுவான் றோஹன பண்டார (வயது 32) கடற்படை வீரருடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது.
குறித்த கடற்படை வீரர், தற்கொலை செய்துக்கொண்டாரா அல்லது இது ஒரு கொலையா என்பது தொடர்பிலான விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
0 Comments