முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோசித்த ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வர் உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்துள்ளனர்.
தம்மைக் கைதுசெய்தமை மற்றும் விளக்கமறியலில் வைத்துள்ளமை போன்றவற்றுக்கு எதிராகவே அவர்கள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும் இந்த மனுவில் பிரதிவாதிகளாக பொலிஸ் மா அதிபர் மற்றும் பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகளும் பெயரிடப்பட்டுள்ளனர்.
இது அடிப்படையற்ற குற்றச்சாட்டு என்பதால், இந்தக் குற்றச்சாட்டுக்களில் இருந்து தம்மை விடுவிக்குமாறும், தமது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும் உத்தரவிட வேண்டும் என, அவர்கள் குறித்த மனுவில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
0 comments: