இரத்தினபுரி, தம்புருவன பிரதேசத்தில் பஸ் ஒன்று களு கங்கையில் விழுந்ததனால் 40 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆடை தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றும் ஊழியர்களை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்து இடம்பெறும் போது பஸ்ஸில் 40 பேர் பயணித்துள்ளனர்.
விபத்து சம்பவம் தொடர்பாக இரத்தினபுரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


0 Comments