Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மாமாங்கம் ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் வித்தியாலயத்தின் 2016 ஆம் ஆண்டுக்கான மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி நிகழ்வுகள்

மட்டக்களப்பு  கல்வி வலயத்திற்குட்பட்ட  மட்டக்களப்பு மாமாங்கம் ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் வித்தியாலயத்தின்   2016 ஆம் ஆண்டுக்கான மெய்வல்லுனர் திறனாய்வு இல்ல விளையாட்டுப் போட்டி நிகழ்வுகள் இன்று பிற்பகல்  02.30 மணியளவில் பாடசாலை மைதானத்தில் அதிபர்  கே . சந்திரசேகரம் தலைமையில் ஆரம்பமானது
 .

தற்போது  ஆரம்பிக்கப்பட்டுள்ள விளையாட்டு போட்டி நிகழ்வில் முதன்மை  விருந்தினர்களாக கிழக்குமாகாண சபை பிரதி தவிசாளர் என் .பிரசன்னா இந்திரகுமார் , கிழக்கு மாகாணசபை உறுப்பினர்  கே .கருணாகரன் , வலயக்கல்வி பிரதி கல்விப்பணிப்பாளர் ( முகாமைத்துவம் ) ஜனாப் எஸ் .எம் .ஐதரலி , உதவிக் கல்விப்பணிப்பாளர் எஸ் . நடராஜா, வலயக் கல்விப் உதவிக் கல்விப் பணிப்பாளர் (உடற்கல்வி) வி .லவக்குமார், மண்முனை வடக்கு கோட்டக்கல்விப் பணிப்பாளர் எ . சுகுமாரன்  மற்றும் இந்நிகழ்வில் பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் ,பாடசாலை ஆசிரியர்கள் , மாணவர்கள் ,பெற்றோர்கள் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர் .

ஆரம்ப நிகழ்வாக பாடசாலை மாணவர்களால் அதிதிகளுக்கு மலர் மாலை அணிவித்து அழைத்து வரப்பட்டனர்.

அதனை தொடர்ந்து  தேசிய கொடிபாடசாலை கொடி மற்றும் இல்லக்கொடிகள் ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன்  மாணவர்களின் இல்ல அணிவகுப்பு இடம்பெற்றது.

விளையாட்டு நிகழ்வினை ஆரம்பிக்கும் முகமாக இல்ல மாணவ தலைவர்களால் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டுமாணவ தலைவர்களின் சத்திய பிரமாண நிகழ்வு இடம்பெற்றது .


தற்போது பாடசாலை மாணவர்களின்   2016 ஆம் ஆண்டுக்கான மெய்வல்லுனர் திறனாய்வு இல்ல விளையாட்டுப் போட்டி நிகழ்வுகள் பாடசாலை மைதானத்தில் இடம்பெற்ற வண்ணம் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது .





























Post a Comment

0 Comments