மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் கல்லடிப்பகுதியில் இன்று காலை பாடசாலை
யதில் இரண்டு பாடசாலை மாணவிகள் உட்பட மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
இன்று காலை 7.00மணியளவில் கல்லடி,வேலூர் பகுதியில் இருந்து பாடசாலைக்கு; மாணவிகள் இருவரை ஏற்றிச்சென்ற மோட்டார் சைக்கிளும் ஆரையம்பதியில் இருந்து பாடசாலைக்கு மாணவர்களை ஏற்றிவந்த வானுமே இவ்வாறு மோதியுள்ளது.
இதன்போது படுகாயமடைந்த மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் தேசிய பாடசாலையில் கா.பொ.த.சாதாரண தரம் கற்கும் மாணவிகளான வி;.சப்னா(16வயது), கே.பஜனா(16வயது) மற்றும் மோட்டார் சைக்கிளை செலுத்திச்சென்ற விநாயகமூர்த்தி(55வயது)ஆகியோரே படுகாயமடைந்துள்ளனர்.
படுகாயமடைந்தவரில் மோட்டார் சைக்கிளை செலுத்திச்சென்றவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் மாணவிகள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
0 Comments