பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்துகொண்ட தேசிய பொங்கல் தின விழாவில் உரையாற்றிய வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், அரசாங்கத்தின் செயற்பாடுகளை கடுமையாக விமர்சித்தார்.
யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இன்று காலை இடம்பெற்ற இந்த நிகழ்வில் உரையாற்றிய முதலமைச்சர், கடந்த தேர்தல்களின் போது ஏற்பட்ட மாற்றங்களை தமிழர்கள் ஏற்றுக்கொண்டுள்ள போதிலும், அவர்கள் இன்னும் அச்சத்துடனும் சந்தேகத்துடனுமே வாழ்வதாகத் தெரிவித்தார்.
வடமாகாணத்தில் பெருமளவு இராணுவம் நிறுத்தப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டிய முதலமைச்சர், இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள பெருமளவு காணிகள் விடுவிக்கப்படவில்லை எனவும், பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்படவில்லை எனவும் குற்றஞ்ட்டினார்.
வடமாகாணத்தில் பெருமளவு இராணுவம் நிறுத்தப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டிய முதலமைச்சர், இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள பெருமளவு காணிகள் விடுவிக்கப்படவில்லை எனவும், பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்படவில்லை எனவும் குற்றஞ்ட்டினார்.
வடமாகாண சபையின் செயற்பாடுகளில் அரசாங்கம் தலையிடுவதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டார். வடமாகாண சபைத் தேர்தலின் போது மக்கள் வழங்கிய ஆணையின்படியே தாம் செயற்படப்போவதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.
0 Comments