Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

வடக்கில் உள்ள இராணுவத்தை குறைப்பது தொடர்பில் காலகிரமத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்

முன்னாள் விடுதலை புலிகள்  உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வளித்து சமூகத்துடன் இணைத்ததை போல ஓய்வுபெறவுள்ள இராணுவ வீரர்களுக்கும் பயிற்சியளித்து சமூகத்துடன் இணைக்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று  இடம்பெற்ற தேசிய தைப்பொங்கல் வைபத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் இதனை கூறினார்.
இராணுவத்தில் ஓய்வு பெறும் நிலையில் பெருமளவான இராணுவ வீரர்கள் உள்ளனர். அவர்கள் ஓய்வு பெற்று சமூக நீரோட்டத்துக்கு செல்லும்போது அவர்களுக்கு பயிற்சி அளித்து சமூகத்தில் இணைக்கப்படுவார்கள் . இதேவேளை, தற்போது மூன்று படைபிரிவினருக்கு பயிற்சியளித்து வரும் இரகசியத்தை வெளிப்படுத்திய பிரதமர், மாலி நாட்டுக்கு யுத்தத்துக்கு அனுப்புவதற்காகவே அவர்களுக்கு பயிற்சியளிக்கப்படுவதாகவும் கூறினார். ஐக்கிய நாடுகள் சபை கேட்டுக்கொண்டால் சர்வதேச நாடுகளின் அமைதி  நடவடிக்கையில் இலங்கை படையினராயும் ஈடுபடுத்த முடியும் என்றும் இவர் கூறினார்.
இந்திய மீனவர்களின் அத்து மீறல் பிரச்சினை முற்றாக ஒழியும்வரை கடற்படையினரின் தொகை குறைக்க முடியாது என்றும் வடக்கில் உள்ள இராணுவத்தை குறைப்பது தொடர்பில் காலகிரமத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார். தற்போது உள்ள சமாதான சூழ்நிலையும் எதிர்காலத்தில் நடக்கும் விடயங்களை வைத்து படிப்படியாக வடக்கிலுள்ள இராணுவத்தினர் வேறு இடங்களுக்கு மாற்றப்படுவார்கள் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

Post a Comment

0 Comments