கடும்போக்குவாதிகள் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தங்களின் சுயநலத்துக்காக பயன்படுத்திக் கொள்வதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். யுத்தத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள அந்த மக்களுக்கு நியாயம் வழங்கப்பட வேண்டும்.
ஆனால் இந்த பிரச்சினையை வடக்கிலும், தெற்கிலும் உள்ள கடும்போக்குவாதிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றனர். இது தவிர்க்கப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
0 Comments