Home » » விலை ஏற்றி விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

விலை ஏற்றி விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

வரவு-செலவு திட்டத்தின் மூலம் விலை குறைக்கப்பட்ட பொருட்களை அதிக விலையில் விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இருப்பதாக நுகர்வோர் சேவைகள் அதிகார சபையின் நிறைவேற்று பணிப்பாளர் ருவான் லங்கேஸ்வர தெரிவித்துள்ளார்.
இதன் படி பால்மா, பருப்பு, நெத்தலி, கருவாடு மற்றும் தானியவகைகள் போன்ற பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டு வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அதிக விலையில் விற்பனை செய்யும் வர்த்தகர்கள் பற்றி அறிந்தால் அவர்கள் தொடர்பான முறைப்பாட்டை 0117755481 மற்றும் 0117755482 ஆகிய எண்கள் மூலம் அறியத்தர முடியும் எனவும் இந்த அதிகார சபை கூறியுள்ளது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |