Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

இந்தோனேஷியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: அச்சத்தில் பொதுமக்கள்

இந்தோனேஷியாவின் தென்கிழக்கு பகுதியில் 6.3 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.
டைமோர் மாகாணத்தில் உள்ள அலோர் தீவை மையமாக கொண்டு 14.3 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம்
டிலி எனும் இடத்தின் வடமேற்கில் 77 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக கிழக்கு டைமோர் மாகாணத்தில் உள்ள பொதுமக்கள் அச்சம் கொண்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் இந்த நிலநடுக்கத்தால் ஏதும் சேதங்கள் ஏற்பட்டதாக இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.
எனினும் நிலநடுக்கத்தை அடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments