Home » » திருகோணமலை நிலக்கீழ் முகாம் காலணித்துவ ஆட்சிக் காலத்தில் நிர்மானிக்கப்பட்டது: கடற்படைத் தளபதி

திருகோணமலை நிலக்கீழ் முகாம் காலணித்துவ ஆட்சிக் காலத்தில் நிர்மானிக்கப்பட்டது: கடற்படைத் தளபதி

திருகோணமலை நிலக்கீழ் முகாம் காலணித்துவ ஆட்சிக் காலத்தில் நிர்மானிக்கப்பட்டது என கடற்படைத் தளபதி விளக்கம் அளித்துள்ளார்.
திருகோணமலை கடற்படை முகாமில் காணப்படும் நிலக்கீழ் முகாம் தொடர்பில் இலங்கை கடற்படையினர் தெளிவுபடுத்தியுள்ளனர்.
திருகோணமலை கடற்படை முகாமில் இரகசிய சிறைக் கூடமொன்று அமைக்கப்பட்டு இயங்கி வந்ததாக ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
இலங்கை பிரிட்டன் காலணித்துவ ஆட்சியில் இருந்த போது இந்த நிலக்கீழ் முகாம் நிர்மானிக்கப்பட்டது.
பிரிட்டன் ஆட்சியாளர்களினால் நிர்மானிக்கப்பட்ட நான்கு நிலக்கீழ் ஆயுதக் களஞ்சியங்கள் திருகோணமலை கடற்படை முகாமில் காணப்படுகின்றது.
கடற்படை முகாமின் பாதுகாப்பிற்காக இந்த ஆயுதக் களஞ்சியம் நிர்மானிக்கப்பட்டுள்ளது. அந்தக் காலத்தில் பீரங்கி வெடிகுண்டுகளை களஞ்சியப்படுத்தவும் அந்தப் பணியில் ஈடுபட்ட கடற்படையினர் தங்கவும் ஆயுதக் களஞ்சியம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த விமானப்படை முகாம் வான் தாக்குதல்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அண்மையில் இலங்கைக்கடற்படையினர் இந்த நிலக்கீழ் முகாமினை பொருட்களை களஞ்சியப்படுத்த பயன்படுத்தியுள்ளது.
மேலும் இந்த முகாமை பார்வையிடுவதற்கு ஐக்கிய நாடுகள் அமைப்பின் பிரதிநிதிகளுக்கு சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது. இந்த விடயம் தொடர்பில் நீதிமன்றில் விசாரணையொன்று நடத்தப்பட்டு வருகின்றது என கடற்படையின் தளபதிää கொழும்பு ஊடகங்களுக்கு நேற்று தெரிவித்துள்ளார்.
கடற்படையினர் இரகசிய சித்திரவதை கூடமொன்றை நடத்தி வந்ததாக சுமத்தப்பட்ட குற்;றச்சாட்டை நிராகரிக்கும் வகையில் இந்த கருத்து வெளியிடப்பட்டுள்ளது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |