இலங்கை மனித உரிமைகள் விவகாரத்தில் அமெரிக்கா பின்வாங்குவதாக, சனல் 4 தொலைக்காட்சியில் ஆவணப்படம் வெளியிட்ட இயக்குநர் கலம் மக்ரே குற்றம் சாட்டியுள்ளார்.
அமெரிக்காவில் செய்தியாளர்களை சந்தித்த கலம் மக்ரே, அமெரிக்க மற்றும் இலங்கை அரசை குற்றம் சாட்டினார்.
அவர் பேசுகையில்,
மைத்திரிபால சிறிசேன அரசு மேற்கு நாடுகளுடன் கூட்டணி அமைத்ததால் அமெரிக்கா பின்வாங்குகிறது.
சீனாவுக்கு ராஜபக்ச ஆதரவளித்ததால் அவர் அரசுக்கு எதிராக செயல்பட்டது அமெரிக்கா.
உள்நாட்டு விசாரணை என்ற நிலைப்பாடு பாதிக்கப்பட்டவர்களுக்கு விரோதமானது.
தமிழர்கள் கொலைக்கு காரணமான மைத்திரிபால சிறிசேன உள்ளிட்டோர் உயர் பதவியில் உள்ளனர் என்றார்.
0 Comments