ஆஸ்திரியாவில் சாலையில் அனாதையாக நின்ற லாரியில் 70-க்கும் மேற்பட்ட சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
ஹங்கேரி நாட்டின் எல்லையில் உள்ள நெடுஞ்சாலையின் ஓரத்தில், கோழிகளை ஏற்றிச் செல்ல பயன்படுத்தப்படும் லாரியானது அனாதையாக நின்று உள்ளது. லாரி புதன் கிழமையில் இருந்தே அங்கு அனாதையாக நின்று உள்ளது, லாரியில் இருந்து துர்நாற்றம் வீசிஉள்ளது. இது குறித்து பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று உள்ளனர். இன்று காலையில் போலீசார் லாரியின் கதவை உடைத்து பார்த்தபோது அதன் உள்ளே இறந்தவர்களின் சடலம் இருந்தது, அவர்களை பெரிதும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
முதலில் சுமார் 20 முதல் 50 பேரது சடலங்கள் உள்ளே இருக்காலாம் என்று கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது 70-க்கும் மேற்பட்ட சடலங்கள் லாரிக்குள் இருந்தது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
லாரியானது ஹங்கேரியில் இருந்து ஆஸ்திரியாவிற்குள் நுழைந்து வியன்னா நோக்கி செல்லும் சாலையில் நின்று உள்ளது என்றும் லாரியில் இருந்தவர்கள் ஏற்கனவே இறந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது. லாரியானது சுங்கத்துறை அலுவலகம் கொண்டு செல்லப்பட்டு, விசாரணை நடத்தப்படுகிறது. நிபுணர்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆஸ்திரியா மற்று ஹங்கேரி நாட்டை சேர்ந்த போலீசார் லாரியின் டிரைவரை கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக இறங்கிஉள்ளனர். லாரியில் ஸ்லோவேகியாவை சேர்ந்த கோழி நிறுவனம் ஒன்றின் பெயருடன் உள்ளது. லாரியில் ஹங்கேரி நாட்டு நம்பர் பிளேட் உள்ளது என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே லாரியில் இருந்தவர்கள் கடத்தப்பட்டவர்களா இல்லை அகதிகளா என்பது தெளிவாகவில்லை. இருப்பினும் அகதிகளாக இருக்கலாம் என்ற சந்தேகமானது மிகவும் வலுத்து உள்ளது. மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்தவர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்வது அதிகரித்து உள்ளது. சட்டவிரோதமாக செல்லும் அவர்கள் இதுபோன்ற ஆபத்தான பயணங்களை மேற்கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் மிகவும் அதிகமான தொகையை இதற்காக செலவுசெய்கின்றனர் என்றும் தெரியவந்து உள்ளது. இதுதொடர்பான செய்தியை கேட்டு ஜெர்மனி நாட்டு அதிபர் மார்கெல் மிகவும் அதிர்ச்சி அடைந்து உள்ளார்.
“குடிபெயர்வோர் பிரச்சனையை விரைவாக எதிர்க்கொள்ள வேண்டும் என்பதற்காக நமக்கு எச்சரிக்கை ஆகும். ஐரோப்பிய நாடுகளில் இப்பிரச்சனைகளுக்கு தீர்வு காண மிகவும் விரைவில் தீர்வு கண்டுபிடிக்க வேண்டும்,” என்று மார்கெல் கூறிஉள்ளார்.
0 Comments