Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

கல்முனை சேனைக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த மாணவன் நீரில் மூழ்கி பலி

கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  சேனைக்குடியிருப்பு கிட்டங்கி வாவியில் தனது நண்பர்களுடன் இன்று ஞாயிற்றுக்கிழமை நீராடிக்கொண்டிருந்த  சேனைக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த த.லுக்சாந்த் (வயது –16) என்பவர்  நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


இது தொடர்பில்  கல்முனை பொலிஸாருக்கும்; கடற்படையினருக்கும் தகவல் வழங்கிய நிலையில், ஒலுவில் கடற்படை முகாம் சுழியோடிகள் சடலத்தை மீட்டுள்ளனர்.   இவர் கல்முனை இராமகிருஸ்னமிசன் கலவன் பாடசாலையில் க.பொ.த சாதாரண தரத்தில் கல்வி கற்கிறார். இந்தச் சம்பவம் தொடர்பில்  கல்முனை பொலிஸார் விசாரணைகளை  மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments