செட்டிபாளையம் கண்ணகை அம்மன் ஆலய ஏற்பாட்டில் வருடாந்த புலமை பரிசில் வழங்கும் வைபவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (31.05.2015) ஆலய முன்றலில் வ.கனகரெத்தினம்(ஆலயத்தின் பரிபாலன சபை தலைவர்) தலைமையில்இடம் பெற்றது.
பிரதம அதிதிகளாக பொன்.செல்வராசா(பா.உ) கலாநிதி மூ.கோபாலரெத்தினம் (பிரதேச செயலாளர் மண்முனை தென் எருவில் பற்று) வ.வாசுதேவன் (பிரதேச செயலாளர் மண்முனை பற்று) அவர்களும் கலந்து கொண்டனர்.
இவ் வருடாந்த புலமை பரிசில் வழங்கும் வைபவத்தின் பொது களுதாவளை,தேற்றாத்தீவு,மாங்காடு,செட்டிபாளையம்,குருக்கள்மடம் மற்றும் கிரான்குளம் ஆகிய கிராமத்தில் இருந்து பல்கலைக்ழகத்திற்கு தெரிவான மாணவ மணவியருக்கு புலமை பரிசில் வழங்கப்பட்டது.





0 Comments