ஹப்புத்தளை - பிட்டரத்மலை தோட்டத்தில் விஷம் கலந்த நீரைப் பருகிய 79 தோட்டத் தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் இன்று காலை 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
தேயிலைச் செடிக்கு தெளிக்கப்பட்ட கிருமிநாசினி ஊற்று நீரில் கலந்துள்ளது.இந்த நீரை சூடாக்கி தேனீர் பருகிய தொழிலாளர்களே இவ்வாறு பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட தோட்டத் தொழிலாளகளுக்கு வாந்தி, மயக்கம், வயிற்றுவலி போன்றவை ஏற்பட்டுள்ளது.
இச்சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட 50 பேர் தியத்தலாவ வைத்தியசாலையிலும் 29 பேர் ஹப்புத்தளை வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹப்புத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


0 Comments