கிழக்கு மாகாண சபையின் விவசாய அமைச்சராக முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் நியமிக்கப்படலாமென நம்பத்தகுந்த அரசாங்கத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று முன்தினம் இது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பிள்ளையானும், அவருடன் புதிதாக இணைந்துள்ள இனியபாரதியும் இவ்விடயம் தொடர்பாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி இருந்தனர்.
கிழக்கில் முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் இணைந்து ஆட்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தநிலையில், தமிழர் ஒருவருக்கு அமைச்சுப் பதவியை வழங்கி நல்லெண்ணத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று அடிப்படையில் பிள்ளையானுக்கு அமைச்சுப் பொறுப்பை வழங்க அரசாங்கம் முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.
0 Comments