Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

48 மணித்தியாலங்களுக்கு தடுத்து வைக்கும் சட்டம் நீடிப்பு!

கொலை மற்றும் பாரிய குற்றங்கள் தொடர்பில் கைதுசெய்யப்படும் சந்தேகநபர்களை குற்றச்சாட்டுகள் இன்றி 48 மணித்தியாலங்களுக்கு தடுத்து வைக்கும் சட்டத்தை புதிய அரசாங்கம் 2 வருடங்களுக்கு நீடித்துள்ளது
நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச, இந்த நீடிப்புக்கு அனுமதியை வழங்கியுள்ளார்.
ஏற்கனவே இந்த சட்டத்தை முன்னாள் அரசாங்கம் அறிமுகப்படுத்தியபோது அதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தமது எதிர்ப்பை வெளியிட்டிருந்தது.
2013 பெப்ரவரி 6ஆம் திகதியன்று இந்தச் சட்டத்துக்கு சபாநாயகர் அனுமதியை வழங்கினார்.
இந்த சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டவரை 48 மணித்தியாலங்கள் தடுத்து வைக்க முடியும் என்பதுடன், சட்டமா அதிபரால் மேல்நீதிமன்றங்களில் நேரடியாக குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யமுடியும்.

Post a Comment

0 Comments