எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெறுவார் என சுயாதீன சோதிடர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

2014 ஆம் ஆண்டின் இறுதி ஜனாதிபதித் தேர்தல் ஒன்று அறிவிக்கப்படும் எனவும் பெண் ஒருவர் இதற்கு தலைமையேற்பார் என்றும் எதிர்பாராத நபர் ஒருவர் தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுவார் எனவும் நாம் கூறிய சோதிட எதிர்வுகூறல் உண்மையாகியுள்ளதாக நாத்தாண்டியே பீ.டி. பெரேரா தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் சிறிசேன கட்டாயம் வெற்றி பெறுவார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை இங்கு கருத்து வெளியிட்ட காமினி புளத்சிங்கள மற்றும் கே.ஏ.யூ. சரத்சந்திர ஆகியோர் மைத்திரிபால சிறிசேனவுக்கு பல ராஜயோகங்கள் இருப்பதாக கூறியுள்ளனர்.
0 Comments