மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புதுக்குடியிருப்பு கடற்கரையோரம் ஆண் ஒருவரின் சடலம் இன்று காலைமீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
40 வயது மதிக்கத்தக்க குறித்த சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் குறிப்பிட்டனர்.
கடலில் மிதந்து வந்த நிலையிலேயே இச்சடலம் கரையொதுங்கியுள்ளது. காத்தான்குடி பொலிஸார் இது தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
0 Comments