Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கிழக்கு மாகாண சபையில் ஆரியவதி கலப்பதி, விமலவீர திஸாநாயக்க உட்படஇருவர் அரசைவிட்டு வெளியேறவுள்ளனர்

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் பொதுச் செய­லாளர் மைத்­தி­ரி­பால சிறி­சேன எதி­ர­ணியின் பொது வேட்­பா­ள­ராக ஜனா­தி­ப­தித் ­தேர்­தலில் போட்­டி­யி­டு­வதை அடுத்து ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சிக்குள் பாரிய பிளவு ஏற்­பட்­டுள்­ளது. மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளிலும் ஆட்சி மாற்­றங்கள் ஏற்­ப­ட­வுள்­ளன. ஊவா, கிழக்கு, மத்­திய மற்றும் வட­மத்­திய மாகாண சபை­களில் ஆட்சி மாற்­றங்கள் ஏற்­ப­டு­மென எதிர்வு கூறப்­ப­டு­கி­றது. பொது­வாக சில மாகாண சபை­களில் புதிய முத­ல­மைச்­சர்கள் பத­வி­யேற்கும் நிலை ஏற்­ப­டு­மெ­னவும் தெரியவரு­கி­றது.
கிழக்கு மாகாண சபையில் ஆரி­ய­வதி கலப்­பதி, விம­ல­வீர திஸா­நா­யக்க ஆகியோர் உட்­பட மேலும் இரு ஆளும் கட்சி உறுப்­பி­னர்கள் ஆளும் கட்­சியை விட்டு வெளி­யேற தயா­ரா­க­வி­ருப்­ப­தாக தகவல்கள் கூறுகின்றன. மத்­திய மாகாண சபை­யிலும் அநு­ராத ஹேரத் தலை­மையில் ஏழு ஆளும் தரப்பு உறுப்­பி­னர்கள் ஆட்சி மாற தயா­ராக இருப்­ப­தாக தெரிய வரு­கின்­றது. ஊவா மாகாண சபை உறுப்­பி­ன­ரான பாரா­ளு­மன்ற விவ­கார அமைச்சர் சுமேதா ஜய­சே­னவின் புதல்வர் சுமேத உட்பட மேலும் சிலர் கட்சி மாறவிருப்பதாகவும் இதனால் அங்கும் ஆட்சி மாற்றம் ஏற்படலாமெனவும் தெரியவருகிறது.

Post a Comment

0 Comments