Advertisement

Responsive Advertisement

அகில இலங்கை தமிழ்த் தின நாடகப் போட்டியில் ஸ்கந்தாவுக்கு முதலிடம்! - வென்றது 'மர்ம முடிச்சு

அகில இலங்கை ரீதியாக இடம்பெற்ற தமிழ்த் தின நாடகப் போட்டியில் சுன்னாகம் ஸ்கந்த வரோதயக் கல்லூரி முதலிடத்தைப் பெற்றுள்ளது. தேசிய மட்ட தமிழ்த் தின ப் போட்டி கடந்த 20 ம் திகதி ஶ்ரீபாத தேசிய கல்வியியற் கல்லூரியில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதல் பரிசு பெற்ற மர்மமுடிச்சு என்ற நாடகத்தை நாடகமும் அரங்கியலும் ஆசிரியர் பு.கணேசராஜா நெறியாள்கை செய்திருந்தார். தேசிய ரீதியாக கடந்த வருடம் இடம்பெற்ற தமிழ் தினப் போட்டியிலும், ஸ்கந்தவரோதயக் கல்லூரியின் நாடகம் முதலிடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment

0 Comments