Home » » விபச்சார விடுதியில் சித்ரவதை: மார்பகத்தை அறுத்த கொடூரம்!

விபச்சார விடுதியில் சித்ரவதை: மார்பகத்தை அறுத்த கொடூரம்!

குஜராத் மாநிலத்தை சேர்ந்த 23 வயது இளம்பெண் ஒருவரை வேலை வாங்கி தருவதாக அலாம், அப்ஷல் என்ற 2 பேர் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் மும்பைக்கு அழைத்து வந்தனர்.
ஆனால் இவரை ஏமாற்றி விபச்சார விடுதியில் ரூ.30,000-த்திற்கு விற்றுவிட்டுச் சென்றனர்.
சினிமாவில் வருவதுபோல் விபச்சார விடுதித் தலைவி இந்தப் பெண்ணை விபச்சாரத்திற்கு வற்புறுத்த இந்தப்பெண் மறுத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த விபச்சார விடுதித் தலைவி மற்றும் சிலரும் சேர்ந்து இந்தப்பெண்ணை சூடு வைத்து சித்ரவதை செய்தனர். பற்களை உடைத்தனர். மேலும் கொடூரமகாச் சென்று மார்பகத்தை அறுத்தனர்.
இந்தத் தகவலை அறிந்த பிவாண்டி போலீஸ் நிலைய அதிகாரிகள் விபச்சார விடுதித் தலைவியை பிடித்து கைது செய்தனர். சிதரவதை செய்த மற்ற 2 பெண்கள் தலைமறைவாகிவிட்டனர்.
கொடூரத்திறு ஆளான இந்தப் பெண்ணிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தநிலையிலும் அவர் பிரமை பிடித்தவர் போல் இருந்து வருகிறார். அவரது மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |