Home » » மூன்று கால்களுடன் தவிக்கும் குழந்தை (வீடியோ இணைப்பு)

மூன்று கால்களுடன் தவிக்கும் குழந்தை (வீடியோ இணைப்பு)

பனமாவில் மூன்று காலுடன் பிறந்த குழந்தையின் சிகிச்சைக்காக அதன் பெற்றோர் மிகவும் பாடுப்பட்டு வருகின்றனர்.
 பனமாவில் உள்ள சிறு கிராமத்தில் இலியானா மான்ராய் என்ற பெண்ணுக்கு, இரட்டை பெண் குழந்தைகள் ஒட்டி பிறந்துள்ளது.
இதில் குழந்தை ஒன்றிற்கு அது ஒரு மாத குழந்தையாக இருக்கும் போது பிரித்து எடுக்க சிகிச்சை நடந்ததால் இறந்துள்ளது.
மேலும் பால் (2) என்ற பெயரிட்ட மற்றொரு குழந்தை தற்போது மூன்று கால்கள் மற்றும் மூன்று சிறுநீரகத்துடன் உள்ளது.
எனவே இதன் கால்களை வெட்டி எடுக்க லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஸ்ரயினர்ஸ் குழந்தைகள் மருத்துவமனைக்கு குழந்தையின் பெற்றோர் லாஸ் ஏஞ்சல்ஸிற்கு உள்ளசென்றுள்ளார்.
இந்நிலையில் குழந்தையின் நடுவில் உள்ள காலையும், செயல்படாமல் இருக்கும் மற்றொரு காலையும் முட்டி அளவுக்கு வெட்டி எடுத்து, பின்னர் செயற்கை கால் பொறுத்தவும் மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து ஸ்ரயினர்ஸ் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் கூறுகையில், இக்குழந்தை செயற்கை காலுடன் நடக்க முடியும் என்றும் ஆனால் மற்ற குழந்தைகள் போல் ஓடி ஆட முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
CHILDREN OF WAR FOUNDATION என்ற அறக்கட்டளை நிறுவனம் இந்த குழந்தைக்கு நிதி திரட்டி, சிகிச்சை பெற உதவியுள்ளது.
இது போன்ற சிகிச்சைகளால் உலகம் முழுவதும் வருடத்திற்கு 12 நபர்கள் மட்டுமே உயிர் பிழைக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |