Advertisement

Responsive Advertisement

பிறந்த நாள் பரிசாக 108 பெண்களை கற்பழித்த நபர்.. அதிர்ச்சி சம்பவம்!.

ரஷ்யாவில் முக மூடி அணிந்து 108 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த கொடூரனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ரஷ்யாவை சேர்ந்தவர் வேல்ரி மெக்ரன்கோவ் இவருக்கு 67 வயதாகிறது. இவர் கடந்த 27 ஆண்டுகளாக பல பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். இவர் நீண்ட காலமாக காவல் துறையினரால் தேடப்பட்டு வந்தார். இவர் முகமூடி அணிந்து கொண்டு பாலியல் வன்முறைகளில் ஈடுபட்டுவந்துள்ளார்.

மேலும் பலாத்காரம் செய்த பின்னர் அப்பெண்களின் நகைகளையும் கொள்ளையடித்து உள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் 29 வயதுடைய ஒரு பெண்னை பாலியல் பலாத்காரம் செய்யும் போது அந்த பெண் இவருடைய முக மூடியை எடுத்துள்ளார். இதை தொடர்ந்து அவரது முகத்தை காவல் துறையினருக்கு அடையாளம் காட்டினார். காவல்துறையினர் அவரை கைது செய்தனர். 

காவல்துறையினர் நடத்திய விசாரணையில், இவர் கடந்த 27 ஆண்டுகளில் 108 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும் ஒவ்வொரு ஆண்டும் தனது பிறந்த நாளன்று பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர், பிறந்த நாள் பரிசாக தன்னையே பெண்களுக்கு அர்ப்பணித்தாக கூறி தன்னுடைய செயலை நியாயப்படுத்த முயற்சித்துள்ளார். அவரிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்....!

Post a Comment

0 Comments