கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க பெரியகல்லாறு கடலாச்சியம்மன் ஆலயத்தின் வருடாந்த ஒரு நாள் திருச்சடங்கு தற்போது ஆரம்பமாகி சிறப்பாக நடைபெற்றுவருகின்றது.
இன்று பிற்பகல் பெரியகல்லாறு ஸ்ரீசர்வார்த்த சித்திவிநாயகர் ஆலயத்தில் இருந்து ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது.
மேளதாளங்களுடனும் மாணவர்களின் கலை நிகழ்வுகளுடன் ஆயிரக்கணக்கான அடியார்கள் அலையென கற்பூரச்சட்டி ஏந்திவர அன்னையின் சடங்குக்கான பொருட்கள் மற்றும் அன்னையின் திருவுருவப்பெட்டி என்பன கொண்டுவரப்பட்டன.
இன்று இரவு 12.00மணிக்கு அன்னையின் மிகவும் முக்கியத்துவமான சடங்கான பூரண கும்பம் நிறுத்தும் நிகழ்வு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments