வாழைச்சேனை கடதாசி ஆலையின் தொழிற்சங்க உறுப்பினர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த இரண்டு ஊழியர்கள் இன்று(09) பிற்பகல் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 5 மாத காலமாக கடதாசி ஆலையின் ஊழியர்களுக்கான சம்பளம் வழங்கப்படாத நிலையில், தொழிற்சங்கம் ஒன்றி ஊழியர்களுக்கு மாத்திரம் இன்று சம்பளம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போது இரு தரப்பினரிடையே முறுகல் நிலை தோன்றியுள்ளது.
கடந்த 5 மாத காலமாக கடதாசி ஆலையின் ஊழியர்களுக்கான சம்பளம் வழங்கப்படாத நிலையில், தொழிற்சங்கம் ஒன்றி ஊழியர்களுக்கு மாத்திரம் இன்று சம்பளம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போது இரு தரப்பினரிடையே முறுகல் நிலை தோன்றியுள்ளது.
குறித்த கடதாசி ஆலையில் பணிபுரியும் 154 ஊழியர்களும் தமது சம்பளத்தை தருமாறு கோரி கடந்த ஜனவரி மாதம் இரண்டாம் வாரம் முதல் பணிபுறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவ் ஆலையில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தொழிலாளர் சங்கம், ஐக்கிய தேசியக் கட்சி தொழிலாளர் சங்கம், சுதந்திர வர்த்தக வலய பொது ஊழியர் சங்கம் ஆகிய மூன்று தொழிலாளர் சங்கங்கள் இயங்கி வருகின்றது.
குறித்த ஆலையின்; ஊழியர்களது சம்பள நிலுவையை வழங்குவதற்காக அரசாங்கத்தால் மூன்று கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் எனினும் அதனை வழங்காது இரண்டு மாதத்திற்கான சம்பளம் மாத்திரம் வழங்குவதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதனை ஏற்றக்கொள்ள முடியாதெனவும் தமது முழு சம்பளத்தையும் வழங்குமாறு இரண்டு தொழிற்சங்கங்களை சேர்ந்த ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இன்று ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தொழிலாளர் சங்க உறுப்பினர்கள் பதினொரு பேருக்கு மாத்திரம் சம்பளம் வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நிலையில், மற்றய இரு சங்கங்களின் உறுப்பினர்களும் இதற்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.
இதன் பின்னர் இரு தரப்பினரிடையேயும் மோதல் ஏற்ப்பட்டுள்ளது.
இதன் போது காயமடைந்த இரண்டு பேர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments