Advertisement

Responsive Advertisement

இளம்பெண்ணின் உயிரை பறித்த மின்னல்

அவுஸ்திரேலியாவில் ஜேர்மனை சேர்ந்த இளம் பெண் ஒருவர் மின்னல் தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.ஜேர்மனியை சேர்ந்த ஸ்டெபினி வைடர்நார்த்(22) என்ற இளம் பெண் அவுஸ்திரேலியாவுக்கு சென்றார்.அங்கு கடந்த 21ம் திகதி வடக்கு அவுஸ்திரேலியாவிலிருந்து தொலைவிலுள்ள செம்மறியாட்டு பண்ணைக்கு சென்றுள்ளார்.
அப்போது மின்னல் மிக வேகமாக தாக்கியதில், ஸ்டெபினி படுகாயமடைந்தார், இச்சம்பவம் நடந்த போது இவரது நண்பர் டரேன் மேஜர்(வயது 25) என்பவர் அருகே இருந்ததாக கூறப்படுகிறது.இதனையடுத்து மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட ஸ்டெபினி, நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து வானிலை ஆய்வாளர்கள், மின்னலின் தாக்கத்தால் அவுஸ்திரேலியாவில் ஆண்டு ஒன்றிற்கு சுமார் 5 முதல் 10 உயிரிழப்புக்கள் ஏற்படுவதாக தெரிவித்துள்ளனர்

Post a Comment

0 Comments