Home » » குருக்கள்மடம் 160 முஸ்லிம்கள் கொலை விசாரிக்கப்படும். ஜனாதிபதி ஆணைக்குழு

குருக்கள்மடம் 160 முஸ்லிம்கள் கொலை விசாரிக்கப்படும். ஜனாதிபதி ஆணைக்குழு

கல்முனை – காத்தான்குடி வீதியில் 160 முஸ்லிம்களை கடத்திச் சென்று கொலை செய்யப்பட்டதாக, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீது முன்வைக்கப்பட்டுள்ள முறைபாடு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன் தலைவர் மெக்ஸ்வல் பரணகம இதனைத் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு கொலை செய்யப்பட்ட அவர்கள் புதைக்கப்பட்டதாக கூறப்படும் காத்தான்குடி – குருக்கள்மடம் பகுதியை ஆய்வு செய்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் நீதிமன்றத்துக்கு தெரியப்படுத்தி, அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் எமது செய்திப்பிரிவுக்கு தெரிவித்துள்ளார்
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |