Home » » பெண்களை கடத்தி கற்பழித்து கொன்று அவர்கள் உடலை சாப்பிட்டு வந்த நபர்

பெண்களை கடத்தி கற்பழித்து கொன்று அவர்கள் உடலை சாப்பிட்டு வந்த நபர்

அமெரிக்காவில் பெண்களை கடத்தி கற்பழித்து அவர்களை கொலை செய்து அவர்களின் நரமாமிசத்தை நியூயார்க்கை சேர்ந்த போலீஸ் கில்பெர்டோ வல்லே (32)  அதிகாரி சமைத்து சாப்பிட்டார் என அவரது மனைவி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக போலீஸ் அதிகாரி கில்பெர்டோ கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் உள்ளதுடன் இவர் மீது மான்காட்டன் கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது.  சமீபத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த கில்பெர்டோவின் முன்னாள் மனைவி காத்லீன் மேன்கான் வல்லே (27) நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். அப்போது  அவரது கம்ப்யூட்டரை சோதனையிட்டபோது  அதில் அவர் கொலை செய்த பெண்களின் நிர்வாண போட்டோக்கள் இருந்ததாக தெரிவித்தார். ஒரு காலகட்டத்தில் தானும் அதுபோன்ற செக்ஸ் தொந்தரவுக்கு ஆளாக்கப்பட்டு  கொலை முயற்சியில் இருந்து அவரிடம் தப்பித்ததாக கூறி பயத்தின் மிகுதியால் தேம்பி அழுதார். அவரை நீதிபதி சமாதானப்படுத்தியதுடன் இவரது சாட்சியம் மூலம் போலீஸ் அதிகாரிக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக  சட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |