Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

யாழில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி! மூவர் படுகாயம்!

யாழ்ப்பாணம், புத்தூர் சந்தியில் இன்று பிற்பகல் 1.30 மணியளவில் இடம்பெற்ற கோர விபத்தொன்றில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், பாரதி வீதி அச்சுவேலியைச் சேர்ந்த கந்தசாமி ரனோஜன் ( வயது 19 ) என்ற இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். வடமராட்சி பருத்தித்துறைப் பகுதியைச் சேர்ந்த ப.பத்மசீலன் (வயது 26) , யோ. பிறேம் (வயது 26) , அச்சுவேலியைச் சேர்ந்த செ. ஜெயக்குமார் ( வயது 32) ஆகிய மூவரும் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments